லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளரும் சொப்ட்வெயார் கிராபிக்ஸ் செயற்பாட்டுத் தலைவரும் இலங்கை அச்சு நிலையத்தின் விரிவுரையாளருமான முஹம்மட் ஒஸ்மான் ஜாயா நேற்று (13) கொழும்பில் காலமானார். அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.30 மணிக்கு அன்னாரின் கொத்தட்டுவ, போபெட்ட வீதி, இல- 300 ஏ இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு ஜாவத்த முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 1980 டிசம்பர் முதலாம் திகதி லேக் ஹவுஸ் நிறவத்தின் உற்பத்தி பிரிவு நிறைவேற்று உத்தியோகத்தராக இணைந்த இவர், பல பதவி உயர்வுகளையும் பெற்று பிரதி பொது முகாமையாளராகப் பதவி வகித்து ஒய்வு பெற்றார். கணனி வரைபட கலை நிபுணராகவும் இவர் திகழ்ந்தார்.
எண்பதுகளின் நடுப்பகுதியில் போட்டோ டைப்செட்டிங் சிஸ்டங்களைத் ஆரம்பிப்பதில் முக்கியப் பங்காற்றிய இவர், 2008 இல் விளம்பரப் பிரிவுகளுக்கு பணிப்பாய்வு அமைப்புகளை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் தலையங்கம் மற்றும் நூலக அமைப்புகளை இணைத்த
இவர், செப்டம்பர் 1994 இல் டெய்லி நியூஸின் இணைய பதிப்பை அறிமுகப்படுத்துவதற்கான செயல்பாட்டுக் குழுவில் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.