Wednesday, April 24, 2024
Home » பலாலி கிழக்கு காணிகள் சிலதை விரைவில் விடுவிக்க முனைப்பு

பலாலி கிழக்கு காணிகள் சிலதை விரைவில் விடுவிக்க முனைப்பு

யாழ். மாவட்ட செயலாளர் சிவபால சுந்தரன்

by mahesh
February 14, 2024 7:20 am 0 comment

யாழ். பலாலி கிழக்குப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்படும் காணிகளில் சிலவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் தற்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கடிதப் பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழு யாழ்ப்பாணம் வருகை தந்து, காணி விடுவிப்புக்கான அளவீட்டுப் பணிகள் உள்ளிட்ட இதர பணிகளை முன்னெடுக்கும். இதையடுத்து காணிகள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT