Friday, March 29, 2024
Home » கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் நினைவுப் பேருரை

கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் நினைவுப் பேருரை

by mahesh
February 14, 2024 2:00 pm 0 comment

கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நினைவுச் சொற்பொழிவு எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு கொழும்பு, சாஹிரா கல்லூரியின் கஃபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

‘இலங்கை முஸ்லிம், தமிழ்த் தலைவர்; செனட்டர் அஸீஸின் உரைகளில் சட்டமும் அதன் நிகழ்கால முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எம். சொர்ணராஜா உரை நிகழ்த்தவுள்ளார், சர்வதேச திட்ட ஆலோசகர் கேப்டன் ஏ.ஜி.ஏ. பாரி மற்றும் கொழும்பு டைம்ஸின் ஆசிரியர் எம்.சி. ரசூல்தீனும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர். கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அறக்கட்டளையின் தலைவர் காலித் எம். பாரூக் மற்றும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ தேசிய தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் ஆகியோர் நிகழ்வுக்கு இணைத் தலைமை தாங்குவர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT