Tuesday, March 19, 2024
Home » மின்சாரம் துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மீள்மின்சாரம் வழங்கும் மனிதநேயபணி

மின்சாரம் துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மீள்மின்சாரம் வழங்கும் மனிதநேயபணி

ஹாசிம் உமர் பௌண்டேசன் ஆற்றும் சேவைகளுக்கு பாராட்டு

by mahesh
February 14, 2024 4:08 pm 0 comment

பணம் படைத்தவர்கள் மனம் படைத்தவர்களளாக இருப்பதில்லை என்கின்ற தத்துவத்தை பொய்யாக்கிய மனிதர்தான் புரவலர் ஹாசிம் உமர். சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் எனக்கு அவருடனான நெருக்கமான உறவு ஆரம்பித்தது. யதார்த்தவாதி பொதுசனவிரோதி என்ற அடிப்படையில் அவர் மீதான சிலருடைய விமர்சனங்கள் தவறானவை என்பதை அவருடன் நெருக்கத்தை ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளேயே அறியமுடிந்தது.

ஹாசிம் உமர் என்கின்ற ஒரு தனிமனிதரிடம் காணப்படும் மனிதநேயத்தைக் கண்டு வியப்பாக இருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கிக் கிடக்கும் வீடுகளுக்கு அவரது தலைமையில் இயங்கும் ‘ஹாசிம் உமர் பௌண்டேசன்’ ஊடாக மீண்டும் மின்விநியோகத்தை வழங்கும் மனிதநேய நிகழ்ச்சித் திட்டத்தை எனது தலைமையில் காத்தான்குடி, புதியகாத்தான்குடி, பாலமுனை, பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய், காங்கேயன்ஓடை, ஒல்லிக்குளம், சிகரம், கீச்சான்பள்ளம் உட்பட சில கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் மின்விநியோகத்தைப் பெற வசதியற்ற குடும்பங்கள் இதனால் பயனடைந்தன. மாதக்கணக்கில் கைக்குழந்தைகளுடன் இருளிலே நுளம்புக் கடிக்கும், வியர்வைக்கும் மத்தியில் சீவியத்தை நடத்திவரும் எத்தனையோ குடும்பங்கள் இம்மனிதநேய பணியினால் நன்மையடைந்துள்ளன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தமது வீட்டைச் பூட்டி விட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து அவலங்களை சுமந்து வாழும் பல குடும்பங்கள் காணப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் குடும்பங்கள், வீட்டில் மின்சாரம் இன்மையால் தெருவிளக்கில் கற்கும் குழந்தைகள் என்றெல்லாம் எத்தனையோ அவலங்களைக் காண முடிந்தது.

இத்தகைய கஷ்டங்களைச் சுமந்து வாழும் பல குடும்பங்களின் இருள் சூழ்ந்த வாழ்க்கைக்கு ஹாசிம் உமர் பௌண்டேசனின் மீள்மின்சாரம் வழங்கும் திட்டம் பாரியளவிலான நலன்களை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தை காத்தான்குடியையும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் முன்னெடுத்து வரும் முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், ஹாசிம் உமர் பௌண்டேசன் கிழக்கு மாகாண பணிப்பாளரும், மனிதம் சிறீலங்கா நிறுவன தலைவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் அவர்களின் சேவையை பலரும் பாராட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT