யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.
பிரதேச ரீதியில் இனங்காணப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்கீகாரங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்குழு கூட்டம் பிரதேச செயலாளரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர், வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புக்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக பிரதேசத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.