நுவரெலியா பொது சுகாதார பரிசோதகர்களால் நுவரெலியா நகரம் மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை ஆகிய பகுதிகளில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டன.
பொது மக்களின் நன்மைக் கருதி முன்னெடுக்கப்பட்ட விசேட பரிசோதனை நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை கட்டடத்தில் இயங்கும் சிற்றுண்டிச்சாலை மற்றும் வைத்தியசாலைக்கு வெளியே இயங்கும் காணப்படும் சிற்றுண்டிச்சாலைகள், கடைகள் போன்றவை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. மேலும் நுவரெலியா நகரில் இயங்கும் இரண்டு பிரபல உணவகங்கள் திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. சிறந்த உணவு பராமரிப்பு சுகாதார ரீதியான பரிமாற்றம் மற்றும் உணவு தயாரித்தல் என்பன தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.
விசேட பரிசோதனை நடவடிக்கையில் சிற்றுண்டிசாலை பராமரிப்பு மற்றும் சுத்தமான உணவை தயாரிக்க தவறிய சிற்றுண்டி சாலை மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபை பொது சுகாதார பிரிவு அதிகாரி கித்சிரி ஹேரத் தெரிவித்தார்.
ரமேஷ்