Home » வாள்வெட்டுத் தாக்குதல்களில் கடந்த வருடம் 13 பேர் பலி!

வாள்வெட்டுத் தாக்குதல்களில் கடந்த வருடம் 13 பேர் பலி!

by damith
February 13, 2024 10:01 am 0 comment

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு இலக்காகி, சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வாள்வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

யாழ். பிரதேசத்தில் கடந்த வருடம் வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில், இவ்வாறான மரணங்கள் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(யாழ்.விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT