Home » கொத்மலை ஓயாவில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

கொத்மலை ஓயாவில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

by Prashahini
February 12, 2024 3:21 pm 0 comment

கொத்மலை ஓயாவிலிருந்து இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலமொன்று இன்று (12) மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாகசேனையில் இலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பயணித்த பயணிகள் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் லிந்துலை அகரகந்த பகுதியைச் சேர்ந்த 45 வயதான பழனிவேல் செல்வகுமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு நுவரெலியா மாவட்ட நீதவான் வந்து விசாரணை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT