ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் (18 வயதுக்குட்பட்டோர்) போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற எல்.எம்.சுசல் த சில்வாவை, பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டினார். கடந்த 09 ஆம் திகதி பிரதமரின் பாராளுமன்ற அலுவலகத்தில் வைத்தே அவரைச் சந்தித்தார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி பயின்ற இளம் கிரிக்கெட் வீரரான இவர், நாட்டுக்கு கொண்டு வந்த புகழைப் பாராட்டி, அவரது எதிர்கால வாழ்க்கைக்கு ஆசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் விளையாட்டு வீரர் எல்.எம்.சுசல் த சில்வாவின் தாயார் Youth Circle of Sri Lanka இன் தலைவர் மஹிம் திசநாயக்க, சனச வர்த்தக விரிவாக்க பணிப்பாளர் (சனச காப்புறுதி) துசித் வீரவர்தன, சனச பயிற்சி பிரதானி (சனச காப்புறுதி) சாலி யசில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
15 வயதுடைய எல்.எம்.சுசல் த சில்வா, (2021) இலங்கையின் இளைய தேசிய செஸ் சாம்பியனானார், 2022 இல் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் 2023 இல் மூன்றாவது முறையாகவும் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றார். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல தேசிய செஸ் சாம்பியன்ஷிப்களையும் வென்றுள்ளார்.