Wednesday, April 24, 2024
Home » யாழில் பெண் உயிரிழப்பு; இடமாற்றம் காரணமா?

யாழில் பெண் உயிரிழப்பு; இடமாற்றம் காரணமா?

- மனவிரக்தியால் ஏற்பட்ட தவறான முடிவு

by Prashahini
February 12, 2024 11:05 am 0 comment

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆநற்று (11) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த 49 வயதான பேரம்பலம் புனிதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்துள்ளது. இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனாலும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

அதனால் மனவிரக்தியில் காணப்பட்டவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யாழ். விசேட நிருபர்

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT