அரச வணிக பலநோக்கு கூட்டத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு ஓரிரு தினங்களுக்குள் அனைத்து ச.தொ.ச நிறுவனங்களுக்கும் முட்டை விநியோகிக்கப்படும் என அரச வணிக பல நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள 70 இலட்சம் முட்டைகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதுடன் அந்த முட்டைகள் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்த வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச வணிக பலநோக்குக் கூட்டுத்தாபனம் இந்த வருடத்தின் முதல் தொகை முட்டையை இறக்குமதி செய்துள்ளது. அந்த வகையில் 70 இலட்சம் முட்டைகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று (12) முதல் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்தார்.
இதன்படி இன்று முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை 63 ரூபாவாகவும் அதிகரிக்கலாம் என சங்கம் தெரிவித்துள்ளது.