Wednesday, April 24, 2024
Home » பலத்த காற்றினால் இரண்டாக உடைந்த படகு பாகங்கள் மீட்பு

பலத்த காற்றினால் இரண்டாக உடைந்த படகு பாகங்கள் மீட்பு

by damith
February 12, 2024 9:30 am 0 comment

இயந்திரம் உட்பட பொருட்கள் கடலில் மூழ்கின இயந்திரமின்றி இரண்டாக உடைந்த படகு நேற்று (11) சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் மீட்கப்பட்டு கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.

கடற்கரையில் நங்கூரமிடப்பட்டு படகு நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இரண்டாக உடைந்து இயந்திரமும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளது.

இவ்வாறு உடைந்த படகின் பாகங்கள் கனரக வாகனத்தின் உதவியுடன் கரைக்கு இழுத்து வரப்பட்டன.

கடல் பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர் படகு உடைந்து கிடப்பதை கண்டு தகவல் வழங்கியதையடுத்து படகை மீட்கும் நடவடிக்கையில் ஈடுட்டனர்.

உடைந்த படகு கல்முனை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் வலைகள் உட்பட பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT