Friday, March 29, 2024
Home » ஆசிய கிண்ணத்தை தக்கவைத்தது கட்டார்

ஆசிய கிண்ணத்தை தக்கவைத்தது கட்டார்

by damith
February 12, 2024 10:54 am 0 comment

லுஸைலா அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் அக்ரம் அபீப் பெனால்டிகள் மூலம் பெற்ற ஹட்ரிக் கோலினால் ஜோர்தானை 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கட்டார் அணி ஆசிய கிண்ணத்தை வென்றது.

இதன்மூலம் போட்டியை நடத்திய கட்டார் ஐந்தாவது அணியாக அடுத்தடுத்து ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 2019 ஆம் ஆண்டிலும் அந்த அணி சம்பியனானது.

கடந்த சனிக்கிழமை (10) நடந்த இறுதிப் போட்டியில் அபீபின் பெனால்டி மூலம் கட்டார் முதல் பாதியில் முன்னிலை பெற்ற நிலையில் யாஸான் அல் நெய்மத்தின் கோலினால் ஜோர்தான் பதில் கோல் திருப்பியது. என்றாலும் அபீபி கிடைத்த மேலும் இரு ஸ்பொட் கிக் வாய்ப்புகளை கோலாக திருப்பினார்.

2004 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பின்னர் கட்டார் முதல் அணியாக நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்ததோடு முதல் முறை ஆசிய கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை ஜோர்தான் இழந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT