Friday, April 26, 2024
Home » கோட்டைக்கல்லாறு பிரதேசங்களில் வெற்றுப் போத்தல்கள் அகற்றல்

கோட்டைக்கல்லாறு பிரதேசங்களில் வெற்றுப் போத்தல்கள் அகற்றல்

by damith
February 12, 2024 5:55 am 0 comment

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதேசங்களில் காணப்படும் வெற்றுபோத்தல்களை அகற்றும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றது.

இதன்போது கோட்டைக்கல்லாறு பொதுவிளையாட்டு மைதானம் மற்றும் கோட்டைக்கல்லாறு கிராமத்தின் நீரேந்தும் பகுதிகளை அண்டிய பிரதேசங்கள் என்பன பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இளைஞர் கழக உறுப்பினர்களின் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டது.

பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் களுதாவளை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கேற்றப்புடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT