Friday, March 29, 2024
Home » புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதி திறப்பு
கனேவல்பொல நிக்கவெவ பிரதேசத்தில்

புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதி திறப்பு

by damith
February 12, 2024 5:57 am 0 comment

மிகிந்தலை தேர்தல் தொகுதிக்குட்பட்ட கனேவல்பொல நிக்கவெவ கிராமத்தில் குவைத் நாட்டின் இஸ்லாமிய கெயார் சொசைட்டி அமைப்பின் நிதியுதவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர தொகுதி அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் அல்ஹிமா அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நூருல்லாஹ் (நளீமி) ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அல்ஹிமா அமைப்பின் பணிப்பாளரிடம் விடுத்த வேண்டுகோளின்பேரில் இக்குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர தொகுதி மூலம் நிக்கவெவ, கனேவல்பொல, ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 400 இற்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

நிக்கவெவ ஜும்மா பள்ளி தலைவர் முஹம்மது சாலியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முஹம்மத், ஓய்வு பெற்ற அதிபர்களான ரசாக், பாருக் மற்றும் ஊர் மக்களென பலரும் கலந்துகொண்டனர்.

கெக்கிராவ குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT