உலக ஈரநில தினத்தையொட்டி பெத்தகனா ஈரநிலங்கள் திட்டத்தின் முதல் விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த ஈரநில விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் சிலோன் தேயிலை நிறுவனத்தினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் ஒட்டுமொத்த இயற்கை ஆர்வலர்கள் என மூன்று தரப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 25 ஹெக்டேயர் பரப்புள்ள இந்த ஈரநிலம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுச் சூழல் மற்றும் நிலப்பரப்பு ஆகியன உலக வங்கியின் நிதியுதவியுடன் இயற்கையான இந்தச் சூழலை பாதுகாக்கின்றன. இந்நிகழ்வில் சொத்து மற்றும் காணி அபிவிருத்திக்கான பிரதி பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ.சி.பிரியசாந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுற்று சூழலும் நிலப்பரப்பிற்கும் பொறுப்பான பணிப்பாளர் திருமதி சந்தனா கலுபஹன உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாளிகைக்காடு குறூப் நிருபர்