Thursday, March 28, 2024
Home » 349 பேர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பட்டியல் யுக்திய பதிவேட்டில் இணைப்பு

349 பேர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பட்டியல் யுக்திய பதிவேட்டில் இணைப்பு

by mahesh
February 10, 2024 10:02 am 0 comment

நாடளாவிய ரீதியில் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியல், பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய பொலிஸாரின் ‘யுக்திய’ பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 டிசெம்பர் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைது நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இதற்கமைய தற்போது கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களை உதவியாளர்களென அடையாளம் காணப்பட்ட 53 கடத்தல்காரர்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட 296 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியலே வெளியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT