Wednesday, April 24, 2024
Home » இறப்பர் பால் அறுவடைக்கு நவீன Robot இயந்திரம்

இறப்பர் பால் அறுவடைக்கு நவீன Robot இயந்திரம்

- தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு

by mahesh
February 10, 2024 7:20 am 0 comment

தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கையில் முதன் முறையாக ரோபோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறப்பர் பால் அறுவடை இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம், இலங்கையிலுள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

நாட்டில் சுமார் 37 மில்லியன் இறப்பர் மரங்கள் உள்ளதுடன், தொழிலாளர் பற்றாக்குறையால் அவற்றில் 50 சதவீத இறப்பர் மரங்களில் அறுவடை செய்யப்படவில்லை. கணினி மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ இயந்திரம், ஒரே நேரத்தில் ஒரு கிலோமீற்றர் பரப்பளவில் 20,000 இறப்பர் ஆலைகளை தானாகவே கட்டுப்படுத்தும் திறன் கொண்டதெனவும் தெரியவருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT