Thursday, April 25, 2024
Home » ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பம்

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பம்

by mahesh
February 10, 2024 6:10 am 0 comment

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பித்துள்ளமை அவர்களது செயற்பாடுகளிலிருந்து தெரிய வருவதாக, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

“எமது போராட்டத்துக்கு அடித்தார்கள், கண்ணீர் புகைக் குண்டுகளால் தாக்கியதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று ஜனாதிபதியின் உரையின் போது எழுந்து சென்றனர். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியில் பிளவு ஏற்பட்டமையை நேற்றைய அவர்களின் செயற்பாட்டில் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

ஏனெனில் எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் சபையில் அமர்ந்துகொண்டே இருந்தனர். இவ்வாறான செயற்பாடுகளால் மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT