99
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்றொழிலாளர்கள் 19 பேர் 2 படகுகளுடன் நேற்று முன்தினம் (07) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடற்படையினரும் கரையோர பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து நடத்திய விசேட சோதனையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட 2 படகுகளுடன் மேற்படி 19 கடற்றொழிலாளர்களும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் இவர்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
யாழ். விசேட நிருபர்