Friday, April 26, 2024
Home » கொழும்பின் சில பகுதிகளில் நாளை 15 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 15 மணித்தியால நீர் வெட்டு

- அம்பத்தலவில் அத்தியாவசிய பராமரிப்பு பணி

by Rizwan Segu Mohideen
February 9, 2024 10:11 am 0 comment

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை பி.ப. 5.00 மணி முதல் நாளை மறுதினம் (11) மு.ப. 8.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

அம்பத்தல நீர் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் வலுசக்தி பாதுகாப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01 – 15 பெயர்கள் (Colombo 01 – 15 Names)

  • கொழும்பு 1 – கோட்டை
  • கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
  • கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
  • கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
  • கொழும்பு 5 – ஹெவ்லக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
  • கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
  • கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
  • கொழும்பு 8 – பொரளை
  • கொழும்பு 9 – தெமட்டகொட
  • கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
  • கொழும்பு 11 – புறக்கோட்டை
  • கொழும்பு 12 – புதுக்கடை, வாழைத்தோட்டம்
  • கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
  • கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
  • கொழும்பு 15 – மோதறை/முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT