பதில் பொலிஸ் மாஅதிபர் எச்சரிக்கை
குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புகளுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவதாக, பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
பம்பலப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குற்றச்செயல்களை மேற்கொள்வோருடன் தொடர்பை பேணி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களது பதவி அந்தஸ்து பாராது தண்டிக்கப்படுவார்களெனத் தெரிவித்த அவர், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அஞ்சப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் தொடர்புடைய சம்பவத்துடன் நெருங்கிய தொடர்பை பேணிய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.