Friday, March 29, 2024
Home » புலிகள் அமைப்பிலிருந்து வெளிவர நான் எடுத்த முடிவு சரியானது

புலிகள் அமைப்பிலிருந்து வெளிவர நான் எடுத்த முடிவு சரியானது

by sachintha
February 9, 2024 6:48 am 0 comment

துரோகியென அழைப்பது முற்றிலும் தவறு

தமிழ் இனத்தினதும், தமிழ் தேசிய வரலாற்றினதும் துரோகியென என்னை அழைப்பது முற்றிலும் தவறான கருத்து. விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு வெளியே வர நான் எடுத்த முடிவு சரியானது என்று, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், புலம்பெயர் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் இவ்வாறு என்னை அழைப்பது முற்றிலும் தவறு. விடுதலைப் புலிகள் இயக்கத்தை நான் தான் அழித்தேன், நான் தான் காட்டிக் கொடுத்தேன் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். அக்காலப்பகுதியில் ஒருமுறை மாத்திரமே போர் நடக்கும் களமுனைக்கு சென்றிருந்தேன்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் மரணத்தின் போது அடையாளப்படுத்தவே என்னை அனுப்பியிருந்தனர். ஆனால் மக்களின் கருத்து மிகவும் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளதென்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT