Wednesday, April 24, 2024
Home » பொலன்னறுவை மாவட்ட பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

பொலன்னறுவை மாவட்ட பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

by sachintha
February 9, 2024 11:40 am 0 comment

வடமத்திய மாகாண விவசாய விலங்கு உற்பத்தி மற்றும் மீன்வள அமைச்சின் மூலம் பொலன்னறுவை மாவட்ட மீன்பிடி மற்றும் அலங்கார மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பயனாளிகளுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோரின் தலைமையில் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது .

இதற்காக 49 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். மீன்பிடி வியாபாரத்திற்காக 8 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன் பயனாளிகளிடமிருந்தும் 50 வீதம் பங்களிப்பு வசூலிக்கப்பட்டுள்ளது. மாகாண மக்களின் போசாக்கு தன்மையையும் வருமானத்தையும் அதிகரித்து மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். அலங்கார மீன் வியாபாரத்தை மேம்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு நிதிகளை பெற்றுக்கொள்ள முடியும். நாடு சாதாரண சூழ்நிலைக்கு உள்ளான இந்த சந்தர்ப்பத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்த இது பாரிய உதவியாக இருக்கும்.

இதன் போது ஆளுநரின் செயலாளர் மற்றும் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் விஜய வணசிங்க, ஆளுநரின் உதவி பணிப்பாளர் புலத் சிங்கள உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் .

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT