159
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலமுனை அல்–அறபா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் அறபா லெஜன்ட் –ஏ அணி வெற்றி பெற்றது.
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அறபா லெஜன்ட்–பீ அணியினர் 10 ஓவர் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 83 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலெடுத்தாடிய அறபா லெஜன்ட் –ஏ அணி 8.4 ஓவர் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று சுதந்திர வெற்றி கிண்ணத்தை வென்றது.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்