இலங்கையில் உள்ள கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனம் மற்றும் சர்வதேச வர்த்தக இணைப்பாளர் கூட்டிணைப்பு ஆகியன ஒன்றிணைந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அம்ரி நிசாம் மற்றும் வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திர குமார், சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர் வர்த்தக போரத்தின் ஆளுநர் கலாநிதி சிந்தியா சாங் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு கருத்துத் தெரிவித்த சர்வதேச வர்த்தக இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம், “இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் எமது அமைப்பு பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பாரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழிலாளர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம்.
இதனூடாக இலங்கைக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதுடன் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்தவும் முடியும்.
திறந்த பொருளாதாரக் கொள்கையின் ஊடாகவே நாட்டின் பொருளாதார துரிதம் வளர்ச்சியடையும் என்பதுடன் இலங்கையிலுள்ள முன்னணி வர்த்தகர்கள் போட்டி கொடுக்க சந்தைக்கு முகம்கூடியதாகவும் இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்கு இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் பிரமுகர்கள் வருகை தந்திருந்ததுடன், சிறுமுயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி மற்றும் சேவைகளை அறிமுகம் செய்தமை விசேட அம்சமாகும்.
கொழும்பில் ஆரம்ப நிகழ்வும் கலந்துரையாடலும்