Thursday, March 28, 2024
Home » கற்பிட்டியில் முச்சக்கரவண்டி விபத்து; ஒருவர் பலி 7 பேர் காயம்

கற்பிட்டியில் முச்சக்கரவண்டி விபத்து; ஒருவர் பலி 7 பேர் காயம்

by damith
February 6, 2024 8:10 am 0 comment

புத்தளம் – கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட் டிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இவ்விபத்து நேற்றுமுன்தினம் (04) இடம்பெற்றது.புத்தளத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வை பார்வையிட்டு, முச்சக்கர வண்டியில் திரும்பிச் செல்கையில், கற்பிட்டி பகுதியிலிருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இதில்,கற்பிட்டியிலிருந்து முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் அமர்ந்திருந்த ஐந்து பேரில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்தார்.

இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் பயணித்த ஏழு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி, கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆறு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கற்பிட்டி மண்டலக்குடாப் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய வரே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையடக்கத் தொலைப்பேசியில் பதிவு செய்யப்பட்ட இவ்விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது.சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT