மெர்கன்டைல் கால்பந்து சங்கத்தினால் நடத்தப்படும் நொக் அவுட் கால்பந்து தொடரின் முதலாம் மற்றும் இரண்டாம் பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிகள் கொழும்பு, சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் இன்று (06) நடைபெறவுள்ளன.
இதில் இன்று பி.ப. 1.30க்கு ஆரம்பமாகும் இரண்டாம் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் செலிங்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடட் மற்றும் ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் அணிகள் மோதவுள்ளன. செலிங்கோ அணி அரையிறுதிப் போட்டியில் எல்.ஓ.எல்.சி. பினான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட் முறையில் 5–4 என்ற கோல்களால் வீழ்த்தியதோடு ஸ்ரீலாங்க ஏர்லைன்ஸ் அரையிறுதியில் சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பீஎல்சி அணியை 6–5 என்ற கோல்களால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் தோற்கடித்தது.
இதனைத் தொடர்ந்து பி.ப. 3.00 மணிக்கு ஆரம்பமாகும் முதலாம் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பீஎல்சி அணியும் எச்.என்.பி. அசூரன்ஸ் பீஎல்சி அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அரையிறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய எக்ஸ்போலங்கா 3–0 என்ற கோல்களால் அமானா வங்கியை தோற்கடித்ததோடு எச்.என்.பி. அசூரன்ஸ் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் தி ட்ரவலர்ஸ் கிளோபல் அணியை வென்றது.