Friday, March 29, 2024
Home » பலகை ஏற்றிய லொறி பாலத்துடன் ஆற்றில் விழுந்து விபத்து

பலகை ஏற்றிய லொறி பாலத்துடன் ஆற்றில் விழுந்து விபத்து

by Prashahini
February 5, 2024 10:43 am 0 comment

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தோரகொலயாய ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹுலந்த ஓயா பாலம் இடிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (05) காலை மரக்கட்டைகளை ஏற்றிய லொறி ஒன்று பாலத்தை கடக்கும் போதே குறித்த பாலம் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

இதில் பயணித்த சாரதிக்கு அல்லது உதவியாளருக்கு பாரிய காயங்கள் ஏற்படவில்லை எனவும், பாலம் இடிந்து வீழ்ந்தமையினால் எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறை, பெலியத்த, தங்காலை நோக்கிய போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்துக் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT