106
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை யொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் 754 சிறைக்கைதிகள் நாடளாவிய ரீதி யில் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் 29 சிறைச்சாலைகளிலிருந்து மேற்படி கைதிகள் விடுதலையாகி வெளியேறியுள்ளதுடன் அவர்களில் 25 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் 114 சிறைக் கைதிகள் கண்டி பள்ளேகள சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வாரியபொல சிறைச்சாலையிலிருந்து 73 கைதிகளும் மகர சிறைச்சாலையிலிருந்து 70 கைதிகளும் அனுராதபுர சிறைச்சாலையிலிருந்து 64 கைதிகளும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்