123
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதுடன், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பாடசாலை ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், உயர்தர விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சை வினாத்தாள் வெளியானதை அடுத்து வினாத்தாளை இரத்து செய்த பரீட்சைத் திணைக்களம், மீண்டும் அந்த பரீட்சையை கடந்த முதலாம் திகதி நடத்தியது.