காலிமுகத் திடலில் நடைபெற்ற இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது சிறப்பம்சமாகும். சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு இறுதியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டன.
இராணுவ அணிவகுப்புக்குப் பின்னரான வழமையான கலாசார அணிவகுப்பு இம்முறை நடைபெறாததுடன், இலங்கையின் சகல கலாசாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சுதந்திர விழாவில் குறுகிய கலாசார அணிவகுப்பு மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்தது. அத்துடன் தாய்லாந்து பிரதமரின் வருகையினால் தமிழ், சிங்கள, ஆங்கில் மொழியில் அறிவிப்புகளுக்கு மேலதிகமாக தாய்லாந்து மொழியிலும் அறிவிப்பு செய்யப்பட்டமை தாய்லாந்து பிரதமரையும் தாய்லாந்து மக்களையும் கௌரவிக்கும் ஒரு நிகழ்வாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.