Friday, March 29, 2024
Home » யுக்திய நடவடிக்கை: மேலும் 569 சுற்றிவளைப்புகளில் 567 பேர் கைது

யுக்திய நடவடிக்கை: மேலும் 569 சுற்றிவளைப்புகளில் 567 பேர் கைது

- 15 கி.கி. கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் மீட்பு

by Rizwan Segu Mohideen
February 3, 2024 11:14 am 0 comment

– பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 204 பேர் கைது

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் பொலிஸாரால் ‘யுக்திய’ விசேட சோதனை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றையதினம் (03) முன்னெடுக்கப்பட்ட 569 சுற்றிவளைப்புகளில் 562 ஆண்கள் மற்றும் 05 பெண்கள் உள்ளிட்ட 567 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 06 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகணத்தில் 317 சுற்றிவளைப்புகளில் 313 ஆண்களும் 04 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் 54 சுற்றிவளைப்புகளில் 52 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், பிடிவிறாந்து பட்டியலில் உள்ள 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (02) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட போதைப்போருட்கள் விபரம்

        • ஹெரோயின் – 132.271 கிராம்
        • ஐஸ் – 121.095 கிராம்
        • கஞ்சா – 15.908 கி.கி.
        • கஞ்சா செடிகள் – 0
        • போதை மாத்திரைகள் – 0
        • ஏனைய போதைப்பொருட்கள் – 399.95 கிராம்

பிடிவிறாந்து பிடிக்கப்பட்ட 204 பேர் கைது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT