ஸ்ரீலங்கா அரச சேவையாளர்கள் சங்க ஏற்பாட்டில் திறமைகளை வெளிக்கொணர்ந்த அரச திணைக்களங்கள், அமைச்சுக்களின் உள்ள கலைஞர்களுக்கு விருது வழங்கல் நிகழ்வு கொழும்பு தாமரை தடாகத்தில் (30) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மத விவகார, கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வெற்றிபெற்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முதலாம் இடங்களைப் பெற்ற தமிழ், சிங்கள நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.
குருந்திரைப்படம், நாடகம், சங்கீதம், நாட்டியம், சிறந்த திரைப்பட தயாரிப்பாளர், புகைப்படக் கலைஞர், ஒலி ஒளிபரப்பாளர் போன்றவற்றில் விருதுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பௌத்த மத விவகார கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன, மேலதிகச் செயலாளர் திலக் ஹெட்டியாரச்சி கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட கலைஞர்கள் மற்றும் மத்தியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
(அஷ்ரப் ஏ சமத்)