Thursday, March 28, 2024
Home » நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தில் கையொப்பம்; இன்று முதல் சட்டம் அமுல்

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தில் கையொப்பம்; இன்று முதல் சட்டம் அமுல்

- தேசிய நீரளவை சட்டமூலம், நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலங்களும் சான்றுரை

by Rizwan Segu Mohideen
February 1, 2024 10:46 am 0 comment

ஜனவரி 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

அத்துடன், பாராளுமன்றத்தில் விவாதித்து திருத்தங்களுடன் கடந்த ஜனவரி மாதம் 09ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தேசிய நீரளவை சட்டமூலம் மற்றும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் ஆகியவற்றிலும் சபாநாயகர் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலங்கள் 2024ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க தேசிய நீரளவை சட்டம் மற்றும் 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றன.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை எடுப்பதா: 83 பேர் ஆதரவு; 50 பேர் எதிர்ப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்: பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐ.ம.ச. உயர் நீதிமன்றில் மனு

ஜனவரி 23, 24: நிகழ்நிலை காப்புச் சட்டமூல விவாதத்தை ஒத்தி வையுங்கள்!

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT