இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதை துரிதப்படுத்த வெளிவிவகார அமைச்சரிடம் கோரியுள்ளதாக, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
“சாந்தனின் வருகையை விரைவுபடுத்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நான் கோரிய போது, அதற்கான அறிவுறுத்தலை தூதரக அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி எனக்கு தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் வெளிவிவகார அமைச்சு உடனடி கவனம் எடுக்க வலியுறுத்தி வெளிவிவகார அமைச்சருக்கும், வெளிவிவகார பிரதி அமைச்சர் தாரக பாலசூரியவுக்கும் நான் கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளேன். இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் அலி சப்ரியுடன் தொலைபேசியிலும் உரையாடியுள்ளேன்” என்றார்.
சாவகச்சேரி விசேட நிருபர்