Thursday, March 28, 2024
Home » வடமாகாண கடற்றொழில் துறைக்கு 500 மில்லியன் ரூபா அரசு ஒதுக்கீடு

வடமாகாண கடற்றொழில் துறைக்கு 500 மில்லியன் ரூபா அரசு ஒதுக்கீடு

by Gayan Abeykoon
February 1, 2024 8:14 am 0 comment

வட மாகாணத்தில் கடற்றொழில்துறை அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு இவ்வருடம் 80 மில்லியன் நிதி கிடைத்துள்ளது. அதில் பெரும்பகுதி நிதி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்கு கிடைத்த இந்நிதி போதுமானதல்ல. ஆனாலும், வடமாகாண சபை நிதியும் உள்ளது.  அத்துடன் அமைச்சுக்களுக்கு ஊடாகவும் நிதிகள் ஒதுக்கப்படும்.

மேலதிகமாக நிதி வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

கடல் தொழில் அபிவிருத்திக்காக வட மாகாணத்திற்கு 500 மில்லியன் நிதியை அமைச்சு ஊடாக ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இந்த ஒதுக்கீடுகளை முறையாகவும், பயனுள்ளதாகவும் பயன்படுத்த வேண்டும்.

அதற்கு பயனாளிகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT