பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான (பிஎன்எஸ்) ‘ஸைப்’ போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை (30) வந்தடைந்தது.
நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள பாகிஸ்தான் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை சம்பிரதாயத்திற்கு அமைவாக வரவேற்றனர். (பிஎன்எஸ்) ஸைப் PNS SAIF என்ற பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இந்த போர் கப்பல் சுமார் 123 மீட்டர் நீளமாகும்.
276 கடற்படை வீரர்களை சேவையாளர்களாக கொண்டு செயற்படும் இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் முஹம்மது அலி செயற்படுகின்றார்.
மேற்படி கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைத் தளபதிக்கும் இடையில் நல்லெண்ண சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இந்த கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலாத் தளங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
ஸாதிக் ஷிஹான்