இலங்கையின் சிறந்த ஆய்வாளராக, முற்போக்கு சிந்தனையாளராக, எழுத்தாளராக வாழ்ந்து இறையடி சேர்ந்த மர்ஹூம் எம்.ஐ.எம்.மொஹிடீனின் இரண்டாவது சிரார்த்த தினத்தை நினைவுகூரும் நினைவுப்பேருரை அக்கரைப்பற்றிலுள்ள எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தில் கடந்த ஞாயிறன்று (28) நடைபெற்றது.
மேற்படி நிலையத்தின் ஆளுநர் சபைத் தலைவர் ஜாஹ்பர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டய நில அளவையாளர் ஏ.பீ.மொஹிடீன் பாவா பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
மேற்படி நிலையத்தின் நிறைவேற்று அதிகாரி சிராஜ் மசூரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், மர்ஹூம் மொஹிடீனது ஆளுமையை விபரித்து கல்வியியலாளர்களும் பிரமுகர்களும் உரையாற்றினர்.
இந்நிகழ்வின் இறுதியில் எம்.ஐ எம்.மொஹிடீனின் ஆத்ம சாந்திக்காக ஆளுநர் சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எ.ரயீஸ் முப்தி மர்ஹூம் தூஆ பிரார்த்தனை செய்தார்.
அட்டாளைச்சேனை குறூப் நிருபர்