Home » கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையின் அலுவலகம் திறப்பு

கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையின் அலுவலகம் திறப்பு

by mahesh
January 31, 2024 11:20 am 0 comment

கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவையின் அலுவலக கட்டடத் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (30) அப்பேரவைத் தலைவர் விநாயகம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

கல்முனை நகரில் மூன்று மாடிகளைக் கொண்டதாக பிரமாண்டமான தமிழர் கலாசார மண்டபத்தை அமைக்கும் முயற்சியில் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான பூர்வாங்கப் பணியை ஆரம்பித்து வைக்கும் வகையில் இப்புதிய அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்து கொண்டார். அத்துடன் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, பெளத்த மதகுருமார்கள், கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT