Thursday, March 28, 2024
Home » புதிய படைக்கல சேவிதருக்கு செங்கோல், வாள் கையளிப்பு

புதிய படைக்கல சேவிதருக்கு செங்கோல், வாள் கையளிப்பு

- 7ஆவது படைக்கல சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன நாளை பொறுப்பேற்பு

by Rizwan Segu Mohideen
January 30, 2024 1:22 pm 0 comment

ஓய்வுபெறும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோவினால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் கையளிக்கும் நிகழ்வு இன்று (30) முற்பகல் பாராளுமன்ற சபை மண்டபத்தின் வெள்ளிக் கதவுக்கு அருகில் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெனாண்டோ 42 வருடங்கள் பாராளுமன்றத்தில் சேவையாற்றி இன்று (30) ஓய்வுபெறவுள்ளதால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதருக்கு செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் இவ்வாறு சம்பிரதாயபூர்வமாக வழக்கிவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் 6ஆவது படைக்கலச் சேவிதர் நரேந்திர நரேந்திர பெனாண்டோ, 2018 முதல் படைக்கலச் சேவிதராக சேவையாற்றி வந்துள்ளார்.

அதற்கமைய பாராளுமன்றத்தின் 7ஆவது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன நாளை (31) பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன ஆகியோரும் பாராளுமன்றத்தின் திணைக்களங்களின் தலைவர்களும், பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT