மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி வீதத்தை மேலும் அதிகரிக்கவோ அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் அரசாங்கத்தின் வரி விதிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்து ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மறைமுக வரி விதிப்பால் பொருட்களின் விலைகள் அதிகரிக்காது என்றும், பொருட்களி ன் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்ப டையில் பொருட்களின் விலைகள் நிர்ணயிக் கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்