Friday, April 26, 2024
Home » மறைந்த பவதாரணிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு

மறைந்த பவதாரணிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு

by damith
January 30, 2024 10:52 am 0 comment

இசைஞானி இளையராஜாவின் புதல்வி மறைந்த பவதாரணிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு 7, சுதர்ஷி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை நடைபெற்றது.

இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றம் ஏற்பாட்டில் கலைஞர்கள் மன்றத் தலைவர் சுருதி பிரபா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. நிலுக்ஷி வீரசிங்கம் தீப விளக்கை ஏற்றி அஞ்சலி செலத்தியதுடன் வருகை தந்திருந்த கலைஞர்கள் அனைவரும் மறைந்த பவதாரணியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல் உரைகளை கலைஞர்கள் மன்றத் தலைவர் சுருதி பிரபா, சுதர்ஷி மண்டப தலைவர் சமன்பிரிய மாரசிங்க, இசையமைப்பாளர் கருப்பையாபிள்ளை பிரபாகரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் சீதாராமன், ஊடகவியலாளர் சியாவுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நிகழ்த்தினர்.

(கொழும்பு கோட்டை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT