197
வெளிநாட்டு துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படக்கூடிய 61 தோட்டாக்களுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நபர், 61 தோட்டாக்களை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்ததாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரை பிலியந்தலை கடம்புவான பிரதேசத்தில் வைத்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்த தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடையவராவார்.சந்தேக நபரை கெஸ்பேவ மாஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்