Friday, March 29, 2024
Home » நாட்டை முன்னேற்றத் தேவையான சட்டங்களை நிறைவேற்றுவது அவசியம்

நாட்டை முன்னேற்றத் தேவையான சட்டங்களை நிறைவேற்றுவது அவசியம்

ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன

by damith
January 29, 2024 9:15 am 0 comment

-உலக நாடுகளின் வளர்ச்சிக்கிணங்க நாட்டை முன்னேற்றுவதானால், சட்டங்கள் மற்றும் நியதிகளை நிறைவேற்றுவது அவசியமென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளை முன்னேற்றுவதற்கு முன்பதாக முதலில், தாய்நாட்டை முன்னேற்றுவது அனைவரதும் பொறுப்பாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்துள்ளமை தொடர்பில் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருவதாக குறிப்பிட்டுள்ள வஜிர அபேவர்தன எம்.பி. சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் இறுதி இலக்கை அடைந்துள்ளது.

இதனால், இதுதொடர்பில் தேசிய கொள்கை வரைபு சம்பந்தமாக மீள பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டியது அவசியமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டை முன்னேற்றுவதானால் அதற்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றுவதும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT