Friday, March 29, 2024
Home » தேவைப்பாடுடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கல்

தேவைப்பாடுடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கல்

by damith
January 29, 2024 5:55 am 0 comment

தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிக் கிராமத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவரைக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு மிருசுவிலைச் சேர்ந்த துஸ்யந்தன் நந்தினி குடும்பத்தினரால் 9இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பில் 27/01 சனிக்கிழமை வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செ. மயூரனின் வேண்டுகோளிற்கு இணங்க கோழி வளர்ப்பிற்கான கொட்டகை, கோழிகள் மற்றும் 530முட்டைகளை ஒரே தடவையில் அடை வைக்கக்கூடிய அடைப் பொறி ஒன்றும் மேற்படி குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் மயூரன்,நிதிப் பங்களிப்பாளரின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(சாவகச்சேரி விசேட நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT