மாணவர்களை நூலகங்களுடன் இணைக்கும் செயற்றிட்டத்தை அக்கரைப்பற்று பிரதேச சபை அலிஉதுமான் பொது நூலகம் மேற்கொண்டு வருகிறது.
மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் அருகி வரும் இக்காலகட்டத்தில்,இச்செயற்பாடுகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எல். எம். இர்பான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ. எம். முஹம்மது அன்ஸார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது அக்கரைப்பற்று பிரதேச சபையின் நூலகர் ஏ. கே. ஜெளபரின் நெறிப்படுத்தலில் புத்தகக் கண்காட்சி, சிறுவர் நூலக பிரிவு, கண்பார்வை இழந்தவர்களுக்கான தொடுநர் பிரிவு மற்றும் இணைய வழி கற்கைப் பிரிவு ஆகியவையும் திறந்து வைக்கப்பட்டன.
(இறக்காமம் தினகரன் நிருபர்)