Thursday, March 28, 2024
Home » ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட ரஷ்ய பெண் தவறி விழுந்து காயம்

ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட ரஷ்ய பெண் தவறி விழுந்து காயம்

by mahesh
January 27, 2024 12:24 pm 0 comment

ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த போது செல்ஃபி எடுக்க முற்பட்ட ரஷ்யப் பிரஜையான பெண் ஒருவர் நேற்று (26) காலை ரயிலிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். எல்ல கல்பிங்கய பிரதேசத்தில் ரயில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தெமோதர ஆதார வைத்தியசாலையில் இப்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட 25 வயதுடைய கிறிஸ்டினா அலக்வானா என்பவரே இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளார். இவர் நேற்றுக் காலை ஹிக்கடுவையிலிருந்து ஒருநாள் பயணமாக எல்ல நோக்கிப் பயணித்த போதே ரயிலிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட ஏனைய ஆவணங்களை இவர் தங்கியிருந்த ஹோட்டலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT