Saturday, April 20, 2024
Home » ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நுளம்புவலைகள் வழங்கல்

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நுளம்புவலைகள் வழங்கல்

by Gayan Abeykoon
January 25, 2024 7:55 am 0 comment

முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு 60,000 ரூபா நிதி உதவியில் நுளம்பு வலைகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விதையனைத்தும் விருட்சமே அமைப்பினூடாக வழங்கி வைக்கப்பட்டன.  

பிரான்ஸில் வசிக்கும் இந்திரன் றஞ்சிதமலர் தம்பதியினரின் நிதி உதவியிலேயே இந்த நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தக் குடும்பங்களுக்கான நுளம்பு வலைகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இ.றமேஸ், கிராம அலுவலர் த.தனபால்ராஜ், விதையனைத்தும் விருட்சமே உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.

(மாங்குளம் குறூப் நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT