Friday, March 29, 2024
Home » சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுக்கள்

சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுக்கள்

ஜனவரி 31இல், விசாரணை

by damith
November 14, 2023 7:40 am 0 comment

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை, ஜனவரி 31 இல், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டது.

சோபித ராஜகருணா மற்றும் ஆசா தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு விவாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனு மீதான விசாரணையை ஜனவரி 31இல், நிர்ணயம் செய்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT